ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 9 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. இது தவிர காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இன்னொரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. மேலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், தெலுங்கு தேசம் கட்சியும் தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.
ஜெகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றே ஆந்திர மக்கள் நம்புகின்றனர். அதனால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஜெகன் கட்சிக்கு அனுதாப ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆந்திராவில் அவ்வப்போது பிரச்சனைகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு தற்போது ஜெகன் பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் 4 இடங்களையாவது கைப்பற்றினால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு 4 இடங்களை கைப்பற்றாவிட்டால் காங்கிரஸ் அரசு பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கையில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறுவது கடினம் என்றே கூறலாம்.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த விவகாரம் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஜெகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றே ஆந்திர மக்கள் நம்புகின்றனர். அதனால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஜெகன் கட்சிக்கு அனுதாப ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆந்திராவில் அவ்வப்போது பிரச்சனைகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு தற்போது ஜெகன் பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் 4 இடங்களையாவது கைப்பற்றினால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு 4 இடங்களை கைப்பற்றாவிட்டால் காங்கிரஸ் அரசு பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கையில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறுவது கடினம் என்றே கூறலாம்.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த விவகாரம் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment