இந்தியா-ரஷ்யா இடையே நாளை 18 ஒப்பந்தங்கள்

கோவாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய
அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வர உள்ளார். நாளை கோவாவில் நடக்கும் 17 வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சந்தித்து கொள்ள உள்ளனர். இவர்கள் முன்னிலையில் இரு நாடுகளிடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் மிக முக்கியமாக ரூ.39,000 கோடி மதிப்பிலான 5வது தலைமுறை ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணை, போர் கருவிகள், 400 கி.மீ.,வரை செல்லும் திறன் கொண்ட டிரோன்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்டெக் ஸ்டேட் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடையே இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 1 பில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் இந்தியா - ரஷ்யா இணைந்து புதிய ரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

No comments:

Post a Comment