ஓ.பி.எஸ்., - ஸ்டாலின் என்ன பேசினர்?

சென்னை: எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து காவிரி விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினர்.தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ்., உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின் விவசாய சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை அமைச்சர் மற்றும் தலைமை செயலரிடம் கொடுத்துள்ளோம்,
காவிரி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும். அனைத்து கட்சி மற்றும் விவசாய பிரமுகர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து காவிரி தொடர்பாக தமிழக நிலை குறித்து அழுத்தம் தர வேண்டும் . இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment